மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கோரி மராத்தாக்கள் போராடி வருகின்றனர். சமீபத்தில் 57 லட்சம் மராத்தாக்கள் குன்பி சான்றிதழ் பெற தகுதியுடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மராத்தாக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மகாராஷ்டிரா மாநில சட்டபேரவையின் இரு அவைகளிலும் நடந்த சிறப்பு கூட்டத்தில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.