கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் குபுப் மற்றும் நதாங் வட்டாரத்தில் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட 10 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர். இந்திய ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள், சுற்றுலா பயணிகளை மீட்டு உணவு வழங்கினர். மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.