ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல்படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். தேவிபட்டினம் அருகே ஆற்றாங்கரை கடற்பகுதியில் இவர்களை கண்டதும் 2 பேர் தப்பி ஓடினர். அந்தப் பகுதியில் கிடந்த மூட்டைகளில், அரசால் தடை செய்யப்பட்ட 105 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதனை மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர். இவற்றை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த முயன்றிருக்கலாம் என தெரிகிறது. தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.