சென்னை: கோடை வெயில் காரணமாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலையிலேயே பணியை தொடங்கி வெப்ப அலை தொடங்கும் முன் பணியை முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு போதிய குடிநீர், ஓ.ஆர்.எஸ். இருப்பு, நிழற்கூடங்கள், முதலுதவி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சந்தை, அரசு மருத்துவமனைகள், சுற்றுலா தலங்களில் குடிநீர் வசதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள், அவசர மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.