மதுரை: திண்டுக்கல் மாவட்டம், குளிச்சிபட்டியை சேர்ந்தவர் ராமுத்தாய் (72). இவரது சகோதரியின் மகனும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைகை பாலன் (எ) பாலமுருகன், தனது மனைவி ஜெயலட்சுமியுடன், கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்து துப்பாக்கி முனையில் ராமுத்தாயை மிரட்டி கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், ஆயிரம் பவுன் நகைகளைத் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். இந்தநிலையில் பாலமுருகனை நேற்று போலீசார் கைது செய்தனர்.