உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில், 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றஞ்சாட்டப்படுகிறது. உத்திரமேரூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 100 நாள் வேலை திட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதுகுற்றி சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில், 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, நேற்று பொதுமக்கள் ஏராளமானோர், சாலவாக்கம் – செங்கல்பட்டு சாலையில் மெய்யூர் கிராமம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது….
100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதமாக சம்பளம் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
previous post