திருச்செங்கோடு, ஏப்.3: திருச்செங்கோடு நகரில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி, தேர்தல் பிரசார விழிப்புணர்வு அண்ணாசிலை அருகே நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் தலைவர் பரந்தாமன், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், தொழிலதிபர் சரவணன், அறக்கட்டளையின் நிறுவனர் சேன்யோ குமார் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் 100சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
previous post