Saturday, June 15, 2024
Home » 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் சாலையோரத்தில் போடப்பட்டிருந்த குப்பை குவியல் அகற்றம்: பொதுமக்கள் வரவேற்பு

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் சாலையோரத்தில் போடப்பட்டிருந்த குப்பை குவியல் அகற்றம்: பொதுமக்கள் வரவேற்பு

by kannappan

திண்டுக்கல் : வத்தலகுண்டு சிறப்புநிலை பேரூராட்சியில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறைந்த உசிலம்பட்டி சாலை மற்றும் மயான சாலை பகுதியில் சுமார் 1000 அடி நிலத்திற்கு சாலையின் இருபுறமும் அதிமுக ஆட்சியில் மலைபோல குப்பைகள் குவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 500 குடும்பங்கள் துர்நாற்றத்தால், அவதிக்கு ஆளாகினர். அத்துடன் அவ்வப்போது மலையேன குவிந்து இருக்கும் குப்பைமேட்டில் தீ வைக்கப்படுவதால் எழும் புகையால் மூச்சுதிணறல், ஆஸ்துமா, போன்ற சுவாச கோளாறு பாதிப்புகளுக்கு உள்ளாகினர். மக்களின் தொடர் கோரிக்கை ஏற்று, குப்பை கொட்டி கிடக்கும் மயான சாலையை ஆய்வு செய்த பேரூராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் விளைவாக எனது குப்பை, எனது பொறுப்பு திட்டத்தில் சுமார் 800 டன் குப்பைகளை 13 நாட்களில் மூலம் அகற்றபட்டது. துர்நாற்றத்தை போக்கவும் தொற்று பரவுவதை அகற்றவும், ரசாயன பவுடர் தெளிக்கப்பட்டு புதிதாக செம்மண் பரப்பினர். சீரமைக்கப்பட்ட அந்த பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்ட முடியாதபடி பூங்காவாக மாற்ற வேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிருவாகம்.சாலை இரு புறங்களிலும் 100 குழிகள் தோண்டப்பட்டு மூலிகை மற்றும் பூ செடிகள் நடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுப்பிக்கப்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிருவாகம் எச்சரிக்கை பலகைகள் வைக்கபட்டத்தோடு, அப்பகுதி மக்களும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தியுள்ளனர். பூங்காவாக மாற்ற மரக்கன்றுகள் நடபட்ட இடத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டு கொண்டுள்ளனர், மரக்கன்றுகளை பராமரித்து பசும்சோலையாக மாற்றுவது தங்களின் கடமை என்று மக்கள் மனப்பூர்வமாக கூறியுள்ளனர்.   …

You may also like

Leave a Comment

thirteen + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi