விருதுநகர், ஏப்.14: விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வினை 25,445 பேர் எழுதினர். 639 பேர் தேர்வு எழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கி வருகிற 20ம் தேதி வரை நடக்கிறது. நேற்று கணித தேர்வு நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் 116 தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 13,065 மாணவர்களும், 13,019 மாணவிகளும் ஆக மொத்தம் 26,084 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நேற்று 12,589 மாணவர்களும், 12,856 மாணவிகளும் ஆக மொத்தம் 25,445 பேர் தேர்வு எழுதினார். 476 மாணவர்களும், 163 மாணவிகளும் ஆக மொத்தம் 639 பேர் தேர்வு எழுத வரவில்லை.