Sunday, June 16, 2024
Home » ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி 10வது ஆண்டாக 100 சதம் தேர்ச்சி

ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி 10வது ஆண்டாக 100 சதம் தேர்ச்சி

by MuthuKumar

காரைக்குடி, மே 14:காரைக்குடி ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 10வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்குடி ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் ஜெய்ஆகாஷ் 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். பி.தீபிகா மற்றும் சேரான் ஆகியோர் 81 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஹரிஹரசுதன் 79 சதவீதம் பெற்றுள்ளார். 17 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சிறப்பிடத்தை தொடர்ந்து வருகிறது.

பிளஸ்-2வில் தருண் 82 சதவீதம், தர்ஷன் 81 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்விகுழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள், முதல்வர் ரமணன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

You may also like

Leave a Comment

19 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi