Monday, June 17, 2024
Home » வேதாரண்யத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வர்த்தகர்களுக்கு செயல்விளக்கம்

வேதாரண்யத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வர்த்தகர்களுக்கு செயல்விளக்கம்

by Mahaprabhu

வேதாரண்யம், செப்.24: வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள், சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். ஆணையர் வெங்கடலட்சுமணன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும், நுண் உரக்கிடங்கு வளாகத்திலும், செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கிடங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi