வேதாரண்யம்,மார்ச் 20: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு 4, 5 வகுப்பு மாணவர்கள் எழுதினார். ஏற்கனவே கடந்த 21.2.2024-ல் வேதாரண்யம் வட்டாரத்தில் 24 மையங்களில் ஜூனியர் 6,7,8 வகுப்பு, சீனியர் 9,10 வகுப்பு, சூப்பர் சீனியர் 11,12 வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இதில் 709 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார். நேற்று தொடக்க வகுப்பு 4,5 வகுப்பு மாணவர்களுக்கு சப்-ஜூனியர் தேர்வு 21 மையங்களில் நடைபெற்றது. இதில் 410 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை சந்திக்க இது அடிப்படையாக அமையும். என தமிழ்நாடு அறிவியியல் இயக்க வட்டார தலைவர் சித்திரவேல் தெரிவித்தார்.