திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதி இன்றி பட்டப்பகலில் சாக்கு மூட்டையில் மணல் கருதுவதாகவும், இரவு நேரங்களில் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் டிப்பர்களில் மணல் கடத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மணல் அதிக அளவில் கடத்துவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணல் கடத்தும் கும்பலைப் பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….