புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம், பதான்கோட் அருகே உள்ள மமுன் ராணுவ தளத்தில் 9வது படைப்பிரிவின் கண்காணிப்பின் கீழ் ராணுவ வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். வெயில் மிகவும் அதிகமாக இருந்ததால், போர் பயிற்சி உள்ளிட்ட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் வீரர்கள் மிகவும் சோர்வடைந்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். அவருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிலரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர்கள் பதான்கோட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், `வானிலை மிக வெப்பமாகவும், காற்று ஈரப்பதமின்றி வறண்டும் இருந்தது. இதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,’ என்று தெரிவித்தனர்….
வெயிலில் பயிற்சி ராணுவ வீரர் பலி பலர் உடல்நிலை பாதிப்பு
previous post