தர்மபுரி : தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார், நேற்று பென்னாகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.குள்ளாத்திரம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.இதன்பேரில், அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். இதில், 402 பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ₹55 ஆயிரம் இருக்கும். இதுதொடர்பாக மாது மனைவி மகேஸ்வரி(38) என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்….