ஆண்டிபட்டி, மே 14: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(60). இவருக்கு உடலில் புண்கள் ஏற்பட்டு வலியால் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஏற்பட்ட வலியால் அவரது வீட்டில் விஷம் மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் தினேஷ் குமார்(32) கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.