தேனி, மார்ச் 15: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். சிஐடியு தாலுகா செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வைகை அணையில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், பெரியகுளம் சிபிஎம் தாலுகா செயலாளர் முருகன், விவசாய தொழிலளர் சங்க தாலுகா செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெண்மணி, மாயன், பாண்டி, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.