திருவாடானை, மார்ச் 28: திருவாடானை அருகே ஊரணிக்கோட்டையை அடுத்த பழங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ரெத்தினம்(47). இவருக்கு திருமணமாகி மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் விவசாயியான ரெத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக மனமுடைந்து விரக்தியில் இருந்த ரெத்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற திருவாடானை போலீசார், தற்கொலை செய்து கொண்ட ரெத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயி தூக்கிட்டு தற்கொலை
previous post