Monday, June 17, 2024
Home » விவசாயிகள் மகிழ்ச்சி திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: 172 மனுக்கள் குவிந்தன

விவசாயிகள் மகிழ்ச்சி திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: 172 மனுக்கள் குவிந்தன

by Dhanush Kumar

திருவாரூர்: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 172 மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுகொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 172 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

ten + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi