தேவதானப்பட்டி, ஏப். 4: தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். நெல் வயல்களில் வரப்பு ஓரம் உளுந்து பயிர் ஊடுபயிர் சாகுபடி குறித்தும், அவற்றின் பயன்கள் குறித்தும் மேல்மங்கலம் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். ஒரு சாகுபடி பயிரில் ஊடுபயிர் செய்வதால் இரட்டிப்பு மகசூல் மற்றும் நோய் தடுப்பு வழிமுறைகள் பற்றி விளக்கி கூறினர். இந்த பயிற்சியினை வேளாண் கல்லூரி மாணவர்கள் அபினேஷ், ஹரிஸ்பாலன், பிரவீன்குமார், சஞ்ஜய்குமார், சஞ்சித்ராம், சதீஸ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகிய மாணவர்கள் செய்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விவசாயிகளுக்கு பயிற்சி
previous post