சேந்தமங்கலம், மே 12: எருமப்பட்டி அடுத்துள்ள தேவராயபுரம் கிராமத்தில், விவசாயிகளுக்கு உரக்கட்டு செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் பாபு முன்னிலையில் வகித்தார். இதில் திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு விதை, உரக்கட்டு குறித்து பயிற்சி அளித்தனர். அதில் விதை, உரக்கட்டு குறித்த செயல்விளக்கங்களை அளித்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.