திருவில்லிபுத்தூர், ஆக.8: விருதுநகர் மாவட்ட அளவிலான யோகா போட்டியில் மாணவ, மாணவிகள் அசத்தினர். விருதுநகர் மாவட்ட அளவிலான 24வது யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருவில்லிபுத்தூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு யோகா அமைப்புகள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வயது மற்றும் தகுதி அடிப்படையில் யோகாசன போட்டி நடைபெற்றது.
இதில் திருவில்லிபுத்தூரை சேர்ந்த தர் சுவாமிகள் யோகா மையத்தை சேர்ந்த ஜெயவர்த்தினி என்பவர் கண்ணாடி கூண்டில் இருந்து பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினார். யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் யோகாசன சங்க நிர்வாகிகள் தலைவர் முத்துமணி, உப தலைவர் மறக்கண்ணு, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளர் அருண், பொருளாளர் சங்கர பாண்டியன் மற்றும் கம்பர், சண்முகசுந்தரம், முருகன் மற்றும் அரிமா பள்ளி தாளாளர் வெங்கடாசலம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட யோகாசன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.