தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள செட்டிக்கரை ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (36). தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டியில் சோளக்கதிர் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, சோளக்கதிர் வாங்க வந்த ஒருவர், சிவாவின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த சிவா கூச்சல் போட்டதால், அங்கிருந்த பயணிகள் விரட்டிச்சென்று அவரை மடக்கிப்பிடித்து, டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அரூர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த டெய்லர் ஏழுமலை (42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.