திருமங்கலம், ஜூலை 18: திருங்கலம் அருகே டூவீலர் மோதியதில் பேக்கரி ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (58). கூத்தியார்குண்டுவிலுள்ள ஒரு பேக்கரியில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்றுமுன் தினம் கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது, கருவேலம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரன் ஓட்டி வந்த டூவீலர் ரவிக்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிக்குமார், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.