புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த், ‘இந்தியாவில் ஆர்கானிக் பருத்தி உற்பத்தி, பயிரிடும் பரப்பளவு எவ்வளவு? ஆர்கானிக் பருத்தி உற்பத்தி, ஏற்றுமதியின் விவரங்கள் என்ன?, ஆர்கானிக் பருத்தி சான்றிதழ் வழங்கும் விதியை எத்தனை நிறுவனங்கள் மீறியுள்ளன? அத்தகைய முறைகேடுகளைத் தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?’ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் அனுபிரியா படேல் அளித்துள்ள பதிலில், ‘ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் எந்தவித சமரசங்களையும் செய்யாது. ஆர்கானிக் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் விதிமுறைகளை சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் சரியாக பின்பற்றுவது கண்காணிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்….