முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் நத்தம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற விஜயலெட்சுமி அம்மன் கோயிலில் 29 ஆண்டு உற்சவ திருவிழாவை முன்னிட்டு பால்குடம், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் இரவு பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரமும் சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.