வி.கே.புரம், ஜன. 18: வி.கே.புரம் கீழகொட்டாரம் நாராயண குரு மறுமலர்ச்சி மன்றம் சார்பில் 29ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா, 2 நாட்கள் நடந்தது. கபடி போட்டி, உறியடித்தல், ஓட்டப்பந்தயம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் கடந்தாண்டு அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக இசக்கி சுப்பையா எம்எல்ஏ கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இதில் அதிமுக ஜெ பேரவை மாநில துணை செயலாளர் சிவன்பாபு, மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, கலை இலக்கிய அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, நகர செயலாளர்கள் (வி.கே.புரம்) கண்ணன், (அம்பை) அறிவழகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அரிச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், முனியசாமி, கருப்பசாமி, கவுன்சிலர் வைகுண்டலட்சுமி, வேல்முருகன், ஆசிரியர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மன்ற தலைவர் சுபாஷ் குமார், செயலாளர் ஜெய்சன் ஹரிஷ், பொருளாளர் முஸ்தபா, துணை தலைவர் சரவணமுத்து, துணை செயலாளர் காந்த பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். கோபி நன்றி கூறினார்.