போச்சம்பள்ளி, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி அரசம்பட்டியில் நடந்தது. இதில் 32 அணிகள் கலந்து கொண்ட போட்டியில், போச்சம்பள்ளி வட்டம் காந்திபுரம் அணி முதல் பரிசும், வாடமங்கலம் அணி 2ம் பரிசும், மத்தூர் அணி 3ம் பரிசும், முருங்கம்பட்டி அணி 4ம் பரிசும் மற்றும் சிறப்பு பரிசுகள் பல அணிகள் பெற்றன. இதில் போலீஸ் டிஎஸ்பி மனோகரன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், தலைமை ஆசிரியர் ஆனந்தகணேசன், ப்பேர்வே எண்டர் பிரைசஸ் அட்மின் ஜெயராஜ்பாபு. ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
வாலிபால் போட்டியில் வென்ற அணிக்கு பரிசு
previous post