மானாமதுரை, ஆக.11: மானாமதுரை அருகே, வாலிபர் கொலையில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே ஏனாதிக்கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ராமு(27). ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு டிச.1ல் கிராமத்திற்கு அருகே உள்ள விம்மனேந்தல் கண்மாய்க்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பார்த்திபனூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(22), நயினார்கோவில் ஒன்றியம் பெரியஅக்கிரமேசி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த கிளங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அரசு மகன் நாகமுத்து(38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.