Thursday, May 9, 2024
Home » வாலிபரை கம்பியால் தாக்கிய 2 பேர் கைது: முக்கிய குற்றவாளி தலைமறைவு

வாலிபரை கம்பியால் தாக்கிய 2 பேர் கைது: முக்கிய குற்றவாளி தலைமறைவு

by kannappan

ஆவடி: ஆவடி அருகே ஒரு வாலிபரை இரும்பு கம்பியால் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி, அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (22). தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு காமராஜர் நகர் ஆற்றுப் பாலம் அருகே சாமுவேல் நடந்து சென்றிருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர்கள் இரும்பு கம்யால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இப்புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாமுவேலை தாக்கியது பட்டாபிராம் வீரன் (20), ஸ்டாலின் (24), வடமாநில வாலிபர் சாகிப் (22) எனத் தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பட்டாபிராம், சேக்காடு அருகே இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், எஸ்ஐ துரை தலைமையில் போலீசார் நேற்று முன் தினம்  தீவிர வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே பைக்கில் சந்தேக நிலையில் 2 மர்ம நபர்களை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டுவந்னர். விசாரணையில், இருவரும் வீரன், சாகிப் என்பதும், இவர்கள் சாமுவேலை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமைறைவான ஸ்டாலினை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi