தூத்துக்குடி, மே 31:தூத்துக்குடியில் வாலிபரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சிப்காட் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள கோயிலின் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வைகுண்டம் பகுதியை சேர்ந்த சிவா மகன் முத்தண்ணா (21), கொம்பையா மகன் சுடலைக்கண்ணு (24) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த வாலிபரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலைமிரட்டல் இருவர் கைது
previous post