கீழக்கரை,பிப்.4: கீழக்கரையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்காளர் சரிபார்ப்பு, காகித தணிக்கை முறை, இயந்திரம் மூலம் ஏழு வினாடிகள் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், சின்னம், ஆகியவை அச்சிட்டு திரையில் வருவதை சரி பார்த்து உறுதி செய்யலாம் என்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் யசோதா, உதவியாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பயனடைந்தனர்.