நிலக்கோட்டை, மார்ச் 14: நிலக்கோட்டையை சேர்ந்தவர் மனோகரன் (60). இவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக திண்டுக்கல் சென்று விட்டு, இரவில் டூவீலரில் நிலக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சின்னாளபட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டி பிரிவில் வந்த போதுல அந்த வழியாக சாலையின் குறுக்கே சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளிக்கு வழிகாட்டி உதவ முயன்றார். அப்போது வக்கீல் மனோகரன் திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.