வள்ளியூர், மே 11: வள்ளியூர் முத்துகிருஷ்ணஸ்வாமி மிஷன் நடத்தும் வித்யா மந்திர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மகேஸ்வரன் ஷாலினி 486 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். அவர் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார். கோகுல்நாத் யோமு கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளி தாளாளர் மந்திரம், தலைமை ஆசிரியை மாலா நடராஜன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.
வள்ளியூர் வித்யா மந்திர் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி
previous post