கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் வளர்ப்பு நாய் கடித்து 29 ஆடுகள் உயிரிழந்ததை தொடர்ந்து, நாய் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் இருளர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(55). இவர் 100 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மாலை திரும்ப ஆட்டு கொட்டகையில் உள்ளே விட்டு, விட்டு வீடு திரும்பியுள்ளார்.ஆட்டு கொட்டகையின் அருகில் உள்ள நாராயணன் என்பவர் வீட்டில் 6 நாய்கள் வளர்த்து வருகிறார். அவரது நாய்கள் திடீரென ஆட்டு கொட்டகையில் நுழைந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துள்ளது. இதில் 20 குட்டி ஆடுகள் மற்றும் 9 பெரிய ஆடுகள் உயிரிழந்துவிட்டன. மேலும் 7 ஆடுகள் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாராயணன் என்பவரது வளர்ப்பு நாய் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் என்பவரது ஆட்டு கொட்டகைக்குள் நுழைந்து கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது….
வளர்ப்பு நாய்கள் கடித்து 29 ஆடுகள் பலி-நாய் உரிமையாளர் மீது வழக்கு
previous post