காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி மகள் ஷோபனா (26). சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வயிற்று வலி அதிகமானதால் அலறித் துடித்தார். மருத்துவமனைக்கு அழைத்தபோது வலி குறைந்துவிட்டது என கூறி வர மறுத்துள்ளார். அதே நேரத்தில், இரவு வீட்டில் அனைவரும் படுத்து தூங்கிய பிறகு வீட்டின் பின்புறம் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் எழுந்து பார்த்த அவரின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஷோபனா தந்தை பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் இளம்பெண் ஷோபனா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். …
வயிறு வலி காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
previous post