Tuesday, May 21, 2024
Home » வனத்துறை அலுவலரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

வனத்துறை அலுவலரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

by Ranjith

 

திருவில்லிபுத்தூர், ஜூலை 15: திருவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வனவராக இருப்பவர் பழனிச்சாமி(50). இவர் நேற்று இரவு மம்சாபுரம்- செண்பகத்தோப்பு சாலையில் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ரோந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த நபர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தனர். அங்குள்ள தோட்டம் ஒன்றில் சுமார் 10 பேர் வரை இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, மம்சாபுரத்தை சேர்ந்த ஜெயின்ஸ் பவன் என்பவர் அவதூறாக பேசி வனவர் பழனிச்சாமியை தடுத்தார். அங்கிருந்த திருப்பதி என்பவர் வனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த வனவர் பழனிச்சாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மம்சாபுரம் போலீசார் ஜெயின்ஸ்பவன், திருப்பதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi