விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதில் வத்திராயிருப்பில் 61 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் அக்னி வெயில் ஊமை வெயிலாக வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஒருவாரமாக மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மாவட்டத்தில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு, அருப்புக்கோட்டை 43, சாத்தூர் 58, திருவில்லிபுத்தூர் 9.20, சிவகாசி 24, விருதுநகர் 5.20, திருச்சுழி 1, ராஜபாளையம் 26, வத்திராயிருப்பு 61, பிளவக்கல் 41, வெம்பக்கோட்டை 7.60, கோவிலாங்குளம் 1.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது.