வத்தலக்குண்டு, நவ.23: வத்தலக்குண்டுவில் சாலையில் தொங்கும் கேபிள் வயரால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வத்தலக்குண்டு போஸ்ட் ஆபீஸ் சாலையில் நூலகம் அருகே உயரத்தில் சென்று கொண்டிருந்த கேபிள் வயர் பலத்த காற்றினால் சாலையில் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் பேரூராட்சி அலுவலகம், கடைவீதி செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கேபிள் வயர் தொங்கி கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக கேபிள் வயரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.