பொன்னேரி, ஜன 13: மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக நேற்று மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வட சென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
previous post