Wednesday, May 15, 2024
Home » வட்டாட்சியர் நிலையில் 14 பேர் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

வட்டாட்சியர் நிலையில் 14 பேர் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

by Karthik Yash

வேலூர், ஜன.24: வேலூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் 14 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் கோட்ட கலால் அலுவலர் பி.எஸ்.கோபி, வேலூர் வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வருமு் பி.செந்தில், காட்பாடி சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காட்பாடி சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் டி.ராம், வேலூர் நில எடுப்பு சிறப்பு அலகு தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் எஸ்.செந்தமிழ்செல்வி, கலால் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இங்கு பணியாற்றி வரும் எ.கோட்டீஸ்வரன், வேலூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு டிஆர்ஓ அலுவலகத்தில் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு டிஆர்ஓ அலுவலகத்தில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் சி.முருகன், அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் டி.மீராபென் காந்தி, வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் பி.மெர்லின் ஜோதிகா, வேலூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றி வரும் வை.பூமா, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலராகவும், இங்கு பணியாற்றி வரும் வி.சரவணமுத்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மாவட்ட மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மாவட்ட மேலாளர் பி.எஸ்.பத்மநாபன், வேலூர் முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் அலுவலகம், முத்திரைக்கட்டண தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் எஸ்.நரசிம்மன், குடியாத்தம் சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் கோ.சரவணன், காட்பாடி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் டி.ஜெகதீஸ்வரன், வேலூர் கோட்ட கலால் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi