நாகர்கோவில்,அக்.26: ஏஜெஎம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில் நடைபெற்றது. முகாமிற்கு ஏஜெஎம் பவுண்டேசன் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெஜான்சிங் கண் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை மற்றும் டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கண்பார்வை குறைபாடு, பல் பிரச்னைகள், சளி, இருமல், காய்ச்சல், ரத்த அழுத்தம், இதய பரிசோதனை மற்றும் நீரிழிவு பரிசோதனைகள் ஆகியவற்றிற்கு இம்முகாமில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். இதில் நிர்வாகிகள் ஜான், பெஞ்சமின், ஆனி, ஜெயந்த், சமூக ஆர்வலர்கள் கண்ணதாசன், சதீஷ்குமார், கரிகாலன், ரூபன் மற்றும் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடசேரியில் இலவச மருத்துவ முகாம்
previous post