Sunday, June 16, 2024
Home » வடகரை ஜாய் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

வடகரை ஜாய் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

by Karthik Yash

தென்காசி,மே 12: வடகரை ஜாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2023-2024ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளி அளவில் மாணவி தாரிகாலெஷ்மி 493 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி உம்முஹபிபா 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி இஸ்மாயில் ஹனிதா 489 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மாணவ, மாணவிகள் தாரிகாலெஷ்மி, உம்முஹபிபா, கிரிபா உமா தேஷினி, ரேஷ்மா, சிவசூரியா ஆகியோர் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனர். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்களும், 400க்கு மேல் 37 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் பள்ளி தாளாளர் சாலமோன், ஜெயா சாலமோன், முதல்வர் ஜோதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மீரான் மைதீன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி கவுரவப்படுத்தினர்.

You may also like

Leave a Comment

nine − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi