குன்னம், ஜன.14: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு வாழைமரம், மாவிலை தோரணம், கரும்புகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னர் செங்கற்களால் கட்டப்பட்ட அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளநிலை பொறியாளர் ரத்தினகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், துணை தலைவர் ரசூல் அஹமது, திமுக நகர பொருளாளர் இப்ராஹிம் பாஷா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.