தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (64). இவர் நேற்று தனது மகன் விக்னேசுடன் பைக்கில் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐஒசி பேருந்து நிலையம் அருகே சென்றபோது, நிலை தடுமாறி கிருஷ்ணவேணி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதேபோல் கொருக்குப்பேட்டை மணலி சாலையில் சமையல் ஆயில் டேங்கர் லாரி செல்லும்போது 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் லாரியின் பின்பக்க பம்பரில் மாட்டி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறத்து போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர்களை கைது செய்தனர்….