தம்மம்பட்டி, அக்.21: தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (34), லாரி டிரைவர். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பாரதி கோபித்துக்கொண்டு பெற்றோர் சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில், வெங்கடேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
லாரி டிரைவர் மர்மச்சாவு
previous post