முசிறி, செப்.11: முசிறி அருகே முத்தையநல்லூர் ரேஷன் கடையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் வாசுகி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா ஜெயபாலன், ஊர் முக்கியஸ்தர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்வு காணப்பட்டது. விற்பனையாளர் ஜோதிமணி நன்றி கூறினார். இதேபோல் தொட்டியம் வட்டம் ஏலூர்பட்டி ரேஷன் கடையில் நடைபெற்ற முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் 20 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.