திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி காமினி உத்தரவுபடி, போலீசார் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ம் தேதி டி.கே.டி மில் அருகில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ கார்த்தி உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கோவை மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சேர்ந்த ஜி.கார்த்திகேயன் (32) என்பவரை கைது செய்தனர். இவர் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா்த்திகேயனிடம் காவல் துறையினர் நேரில் வழங்கினா்.