திருவாரூர், மே 9: தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராச்சி மைய பொது செயலாளர் ரமேஷ் கூறியிருப்பதாவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு இ-செலான் ரசீது வழங்கி, நீதிமன்றத்தில் செலுத்த போலீசார் அறிவுறுத்தி அனுப்புகின்றனர். அரசு இ-சேவை மையம், வங்கியில் அபராதத் தொகையை பெரும்பாலும் செலுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் வாகன பதிவின் போது கொடுக்கப்பட்ட பைபேசி எண்கள் மாறும் நிலையில் தகவல்கள் முழுமையாக வாகன உரிமையாளர்களுக்கு செல்வதில் தடைகள் இருக்கிறது.
எனவே மாவட்ட அளவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியுடன் சிறப்பு லோக் அதாலத் மூலமாக சமரச முறையில் இசெலான் குறித்து மறு ஆய்வு செய்து அபராத தொகையை வசூல் செய்ய வேண்டும் என்றார். 4 இடங்களில்13 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டி தயாராகிறது