புதுக்கோட்டை: மண், ஜல்லி போன்ற ரூ.85 லட்சம் மதிப்புள்ள 11,000 கனமீட்டர் பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஓ.என்.ஜி.சி. ஒப்படைத்தது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள ஓ.என்.ஜி.சி. ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளது. தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி வட்டங்களில் ஓ.என்.ஜி.சி.யால் மேற்கொண்ட துரப்பன பணி நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் கைவிடப்பட்டு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. …